Skip to main content

மீண்டும் கனவாகிப் போன ரஞ்சி கோப்பை😢

இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ

நடவடிக்கைகள், எதிர்பார்ப்புகள்

bcci leader ganguly
கங்குலி


பிசிசிஐ தலைவர் கங்குலி நேற்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது பலருக்கு நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அதுல முக்கியமான ஒன்னா நான் பாக்குறது டெஸ்ட் மேட்ச்க்கு கங்குலி கொடுக்கும் முக்கியத்துவம்.

பல ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டிக்குக்கு அனுமதி தராத நம்ம கிரிக்கெட் வாரியம், இப்போது கங்குலி தலைவரான பிறகு அந்த முடிவை மாற்றியுள்ளது. தான் பதவியேற்ற உடனேயே கொல்கத்தாவில் வங்கதேச அணிக்கு எதிராக பகலிரவு போட்டியை நடத்தி காட்டினார்.

இப்போது ஒரு படி மேலே போய், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒரு டெஸ்ட் போட்டியும், இங்கிலாந்து இந்தியாவிற்கு வரும்போது புதிதாக கட்டப்பட்டுள்ள அகமதாபாத் மைதானத்தில் ஒரு போட்டியும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்😍😍.

இதுதவிர டெஸ்ட் போட்டியை பிரபலபடுத்த தனியாக மார்கெட்டிங் குழு ஒன்றை நியமித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்களிடம் பிரபலபடுத்தவே இந்த முடிவு என்று தெளிவாக தெரிகிறது.

நம் கிரிக்கெட் உலகம் சார்பாக சில பரிந்துரைகள்:

👉டெஸ்ட் போட்டியை வளர்த்தெடுக்க திருவிழா ( தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை ) சமயங்களில் நடத்தலாம்.

👉கோலி முன்பு கூறியது போல் இந்தியாவில் 5 மைதானங்களில் ( சென்னை, மும்பை, பெங்களுரு, மொகாலி/தர்மசாலா, கொல்கத்தா ) மட்டும் டெஸ்ட் போட்டியை நடத்தலாம்.

👉'பாக்சிங் டே' டெஸ்ட் போல், 1980 வரை சென்னையில் நடைபெற்ற பொங்கல் டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்தலாம்.

இன்னொரு அறிவிப்பாக பிசிசிஐ செயலி (App) விரைவில் அறிமுகப்படும் என்றும் கங்குலி கூறியிருந்தார். இந்த ஆப் ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்றுவது போல் இருக்க வேண்டும். உதாரணமாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வாரியங்கள் ரசிகர்களை கவர பல வழிகளை பயன்படுத்துவது போல.

குறிப்பாக, எந்த ஒரு போட்டி முடிந்த பிறகும் அது சம்மந்தமான சுவாரஸ்யமான ஹைலைட்ஸ் வீடியோக்களை உடனடியாக யூடுபில் வெளியிட வேண்டும். இன்று ஹாட்ஸ்டார் இல்லையென்றால் இந்தியா விளையாடும் போட்டியின் ஹைலைட்ஸை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு இது எவ்வுளவு பெரிய வேதனை. போட்டி முடிந்த பிறகு வீரர்களின் டிரெஸிங் ரூமில் நடைபெறும் கொண்டாட்டத்தை வீடியோவாக இந்த செயலியில் (App) வெளியிடலாம்.

1960,70,80-களில் இந்தியா வெற்றி பெற்ற முக்கியமான போட்டிகளின் வீடியோக்களை நல்ல தரத்தில் வெளியிடலாம்.

Comments

Popular posts from this blog

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் இதோ....

பேஸ்புக் பற்றி தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பேஸ்புக்கில் செலவிடும் கோடிக்கணக்கான நபர்கள் உலகமெங்கும் உள்ளனர். சிலருக்கு பேஸ்புக்கில் பதிவிடப்படும் வீடியோக்கள், செய்திகள், மீம்ஸ்களை பார்ப்பது பொழுதுபோக்காக உள்ளது. பொதுவாக நாம் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்துகிறோம்? எதற்காக பயன்படுத்துகிறோம்? சற்று யோசித்துப் பாருங்கள்… நம் செல்ஃபி புகைப்படத்தை நண்பர்களிடம் பகிரவோ அல்லது சுவாரஸ்யமாக செய்திகளை பொதுமக்களிடம் பகிரவோ அல்லது நமது சந்தோஷமான தருணங்களை வெளிக்காட்டிக் கொள்ளவோ பயன்படுத்தி வருகிறோம். ஆன்லைனில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நிச்சியம் முடியும்! இதில் பல வழிகள் உள்ளது. எந்த முதலீடும் இன்றி (உங்கள் நேரமும் உழைப்பும் அவசியம் தேவை) பேஸ்புக்கில் சம்பாதிக்க சிறந்த வழிகளை உங்களுக்காக இங்கு கூறுகிறேன். இதன் மூலம் பகுதி நேரமாக கூட நீங்கள் சம்பாதிக்கலாம். பேஸ்புக் பக்கம் (Facebook Page) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

வீட்டிலிருந்தே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எளிய வழிகள்

நம் ஒவ்வொருவருக்குமே வாழ்கையில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் பல வேலைகளையும் தொழில்களையும் முயற்சித்து பார்த்திருப்போம். சிலருக்கு இது கைகூடி பணம் லட்சம் லட்சமாக கொட்டும். பலரோ, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்து எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பார்கள். எந்த முதலீடும் செய்யாமல் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? தொழில்நுட்ப வசதிகள் மிகுந்துள்ள இன்றைய காலத்தில், வீட்டிலிருந்தே லட்சக்கணக்காக சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆம், உண்மையை தான் சொல்கிறேன். இதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என நீங்கள் பயப்பட வேண்டாம். ஒரு கணினி அல்லது லேப்டாப் மற்றும் இணைய தொடர்பு – இது இருந்தாலே போதும். சரி, என்னிடம் லேப்டாப்பும் இண்டர்நெட் தொடர்பும் இருக்கிறது. இதை வைத்து என்ன செய்ய என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்களுக்காக தான் இந்த கட்டுரை. வலைப்பதிவு (Blog) அல்லது வலைதளம் (Website): உங்களுக்கென்று சொந்தமாக ப்ளாக் அல்லது வெப்சைட் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர்

சயன கோலத்தில் அத்திவரதர் அத்தி வரதரை எப்போ தரிசிக்க போறீங்க? இன்னும் ஏன் பாக்காமா இருக்கீங்க? இனி 40 வருஷத்துக்கு பிறகு தான் பார்க்க முடியும், உடனே கிளம்புங்க… நீங்க தமிழ்நாட்டுல வசிப்பவரா இருந்தா, கடந்த ஒரு மாசத்துல மேலே சொன்ன கேள்விய உங்ககிட்ட கண்டிப்பா ஒரு தடவையாவது யாராவது ஒருத்தர் கேட்டிருப்பாங்க. பத்திரிக்கை செய்தியிலும், தொலைக்காட்சி நேரலையிலும், சமூக ஊடகத்திலும் கூட கடந்த ஒரு மாதமாக அத்தி வரதரே எங்கும் நிரம்பியிருகிறார். அதுமட்டுமல்லாமல் அத்தி வரதரை தரிசிக்க நாடெங்கிலும் இருந்து மக்கள் குவிகிறார்கள். அப்படியென்ன விசஷேம் இந்த கோலில் இருக்கிறது? "கோயில் நகரம்" என அழைக்கபடும் காஞ்சிபுரத்தில் உள்ளது வரதராஜப் பெருமாள் கோயில். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள ஆனந்த சரஸ் குளத்திலிருந்து 40 வருடத்திற்கு ஒரு முறை அத்தி மரத்தாலான பெருமாளின் திருவுருவம் வெளியே எடுக்கப்படுகிறது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி தருகிறார் அத்திவரதர். 48 நாட்கள் பொதுமக்களுக்கு தரிசனம்