Skip to main content

Posts

Showing posts from 2019

மீண்டும் கனவாகிப் போன ரஞ்சி கோப்பை😢

இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ

இந்திய கிரிக்கெட் அணியின் 'முதல்' வேகப் பந்துவீச்சாளர்

அமர் சிங் பந்துவீசும் காட்சி சுமார் 87 வருஷமா நம்ம இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தனை வருஷத்துல நம்ம அணிக்காக விளையாடிய 10 வேகப்பந்து வீச்சாளரின் பெயரை உடனே சொல்லுங்க பார்ப்போம். வெங்கடேஷ் பிரசாத், ஆர்.பி.சிங், மனோஜ் பிரபாகர், அகார்கர் போன்ற பவுலர்களின் பெயரை நான் கேட்கவில்லை. நான் கூறுவது “முழுமையான” வேகப்பந்து வீச்சாளர். தான் போடக்கூடிய ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்க வேண்டும். பேட்ஸ்மேன் உங்களை கண்டு நடுங்க வேண்டும். ஸ்டம்புகள் தெறிக்க வேண்டும். இவன் ஓவர் எப்போதுடா முடியும் என உள்ளுக்குள் பேட்ஸ்மேன் கதற வேண்டும். அவன் தான் முழுமையான வேகப்பந்துவீச்சாளர். கபில் தேவ், ஜாகீர் கான், பும்ரா, வேற…வேற……சரி உங்க ஆசைக்கு ஸ்ரீநாத் (இவர் மித வேகப்பந்து வீச்சாளர் என்பதே என் எண்ணம்) பெயரையும் சேர்ப்போம். வேறு யாருடைய பெயராவது உங்கள் மனதில் தோன்றுகிறதா? ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணிக்கு எந்தளவிற்கு முக்கியமானவர் என்பதற்கு நம் கண் முன் உதாரணமாக இருக்கிறார் பும்ரா. எத்தனை குறைவாக ரன் அடித்தாலும், பும்ரா இருக்கிறார் என்ற தைரியம் நமக்கு உள்ளது. அந்த ந

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் இதோ....

பேஸ்புக் பற்றி தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பேஸ்புக்கில் செலவிடும் கோடிக்கணக்கான நபர்கள் உலகமெங்கும் உள்ளனர். சிலருக்கு பேஸ்புக்கில் பதிவிடப்படும் வீடியோக்கள், செய்திகள், மீம்ஸ்களை பார்ப்பது பொழுதுபோக்காக உள்ளது. பொதுவாக நாம் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்துகிறோம்? எதற்காக பயன்படுத்துகிறோம்? சற்று யோசித்துப் பாருங்கள்… நம் செல்ஃபி புகைப்படத்தை நண்பர்களிடம் பகிரவோ அல்லது சுவாரஸ்யமாக செய்திகளை பொதுமக்களிடம் பகிரவோ அல்லது நமது சந்தோஷமான தருணங்களை வெளிக்காட்டிக் கொள்ளவோ பயன்படுத்தி வருகிறோம். ஆன்லைனில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நிச்சியம் முடியும்! இதில் பல வழிகள் உள்ளது. எந்த முதலீடும் இன்றி (உங்கள் நேரமும் உழைப்பும் அவசியம் தேவை) பேஸ்புக்கில் சம்பாதிக்க சிறந்த வழிகளை உங்களுக்காக இங்கு கூறுகிறேன். இதன் மூலம் பகுதி நேரமாக கூட நீங்கள் சம்பாதிக்கலாம். பேஸ்புக் பக்கம் (Facebook Page) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

வீட்டிலிருந்தே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எளிய வழிகள்

நம் ஒவ்வொருவருக்குமே வாழ்கையில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் பல வேலைகளையும் தொழில்களையும் முயற்சித்து பார்த்திருப்போம். சிலருக்கு இது கைகூடி பணம் லட்சம் லட்சமாக கொட்டும். பலரோ, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்து எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பார்கள். எந்த முதலீடும் செய்யாமல் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? தொழில்நுட்ப வசதிகள் மிகுந்துள்ள இன்றைய காலத்தில், வீட்டிலிருந்தே லட்சக்கணக்காக சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆம், உண்மையை தான் சொல்கிறேன். இதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என நீங்கள் பயப்பட வேண்டாம். ஒரு கணினி அல்லது லேப்டாப் மற்றும் இணைய தொடர்பு – இது இருந்தாலே போதும். சரி, என்னிடம் லேப்டாப்பும் இண்டர்நெட் தொடர்பும் இருக்கிறது. இதை வைத்து என்ன செய்ய என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்களுக்காக தான் இந்த கட்டுரை. வலைப்பதிவு (Blog) அல்லது வலைதளம் (Website): உங்களுக்கென்று சொந்தமாக ப்ளாக் அல்லது வெப்சைட் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர்

சயன கோலத்தில் அத்திவரதர் அத்தி வரதரை எப்போ தரிசிக்க போறீங்க? இன்னும் ஏன் பாக்காமா இருக்கீங்க? இனி 40 வருஷத்துக்கு பிறகு தான் பார்க்க முடியும், உடனே கிளம்புங்க… நீங்க தமிழ்நாட்டுல வசிப்பவரா இருந்தா, கடந்த ஒரு மாசத்துல மேலே சொன்ன கேள்விய உங்ககிட்ட கண்டிப்பா ஒரு தடவையாவது யாராவது ஒருத்தர் கேட்டிருப்பாங்க. பத்திரிக்கை செய்தியிலும், தொலைக்காட்சி நேரலையிலும், சமூக ஊடகத்திலும் கூட கடந்த ஒரு மாதமாக அத்தி வரதரே எங்கும் நிரம்பியிருகிறார். அதுமட்டுமல்லாமல் அத்தி வரதரை தரிசிக்க நாடெங்கிலும் இருந்து மக்கள் குவிகிறார்கள். அப்படியென்ன விசஷேம் இந்த கோலில் இருக்கிறது? "கோயில் நகரம்" என அழைக்கபடும் காஞ்சிபுரத்தில் உள்ளது வரதராஜப் பெருமாள் கோயில். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள ஆனந்த சரஸ் குளத்திலிருந்து 40 வருடத்திற்கு ஒரு முறை அத்தி மரத்தாலான பெருமாளின் திருவுருவம் வெளியே எடுக்கப்படுகிறது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி தருகிறார் அத்திவரதர். 48 நாட்கள் பொதுமக்களுக்கு தரிசனம்

திக்..திக்..பரபரப்பில் முடிந்த உலக கோப்பை இறுதிப் போட்டி. முதன் முறையாக சாம்பியன் ஆனது இங்கிலாந்து!

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 241 ரன் எடுத்தது. போட்டி ‘டை’ ஆனதன் காரணமாக, ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் போடப்பட்டது. இதில் இரண்டு அணிகளுமே 15 ரன்களை எடுத்து மீண்டும் போட்டி ‘டை’ ஆனதால் அதிக பவுண்டரிகளை அடித்த காரணத்தினால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டிகள் யாவும் ஒரு அணிக்கு சாதகமாகவே முடிந்துள்ள நிலையில், நேற்று நடந்த போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆட்டத்தின் கடைசி நொடி வரை போட்டியில் அனல் பறந்தது. ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு வாழ்கையில் மறக்க முடியாத போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடத் தொடங்கிய நியூசிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன் குப்தில் வழக்கம் போல் சீக்கிரமாக அவுட் ஆகி நட