Skip to main content

Posts

மீண்டும் கனவாகிப் போன ரஞ்சி கோப்பை😢

இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ
Recent posts

நடவடிக்கைகள், எதிர்பார்ப்புகள்

கங்குலி பிசிசிஐ தலைவர் கங்குலி நேற்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது பலருக்கு நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அதுல முக்கியமான ஒன்னா நான் பாக்குறது டெஸ்ட் மேட்ச்க்கு கங்குலி கொடுக்கும் முக்கியத்துவம். பல ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டிக்குக்கு அனுமதி தராத நம்ம கிரிக்கெட் வாரியம், இப்போது கங்குலி தலைவரான பிறகு அந்த முடிவை மாற்றியுள்ளது. தான் பதவியேற்ற உடனேயே கொல்கத்தாவில் வங்கதேச அணிக்கு எதிராக பகலிரவு போட்டியை நடத்தி காட்டினார். இப்போது ஒரு படி மேலே போய், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒரு டெஸ்ட் போட்டியும், இங்கிலாந்து இந்தியாவிற்கு வரும்போது புதிதாக கட்டப்பட்டுள்ள அகமதாபாத் மைதானத்தில் ஒரு போட்டியும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார் 😍 😍 . இதுதவிர டெஸ்ட் போட்டியை பிரபலபடுத்த தனியாக மார்கெட்டிங் குழு ஒன்றை நியமித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்களிடம் பிரபலபடுத்தவே இந்த முடிவு என்று தெளிவாக தெரிகிறது. நம் கிரிக்கெட் உலகம் சார்பாக சில பரிந்துரைகள்: 👉 டெஸ்ட் போட்டியை வளர்த்தெடுக்க திருவிழா ( தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை ) சமய

முதல் போட்டி, முதல் ஓவர், ஹாட்ரிக்: நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த பரிசு

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் மத்தியபிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரவி யாதவ் அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டியியோல் தனது அறிமுக போட்டியிலேயே, அதுவும் தான் வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையே அது. இதில் ஆச்சர்யமான விஷயம், இந்த சாதனையை தான் பிறந்து வளர்ந்த மாநிலமான உத்தரபிரதேச அணிக்கு எதிராகவே படைத்துள்ளார். "இது என் அதிர்ஷடமா என தெரியவில்லை. ஆனால் இந்த சாதனை உத்தரபிரதேசத்திற்கு எதிராக வந்துள்ளது. நான் அங்கு சிறு வயதில் இருந்தே விளையாடி வந்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவழியாக ரஞ்சி வீரராக ஆகியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் 28 வயதான ரவி யாதவ்.  ரெய்னா, ஆர்.பி.சிங் பயின்ற லக்னோவில் உள்ள விளையாட்டு கல்லூரியிலிருந்து தான் ரவியும் தேர்ச்சி பெற்றார். ஆனால் காயம் காரணமாக சுமார் நான்கு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.  அவர் கூறுகையில், எனது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. என்னுடன் U19 அணியில் விளையாடியவர்கள் எல்லாம் முன்னேறி சென்று கொண்டிருந்ததை பார்த்த போது நான் மட

‘ஒரே இரவில்’ கிரிக்கெட்டராக மாறிய பேஸ்பால் வீரர்

பொதுவா ஜப்பான் நாடுன்னு சொன்னா சுமோ வீரர்கள் , அறிவியலில் கில்லாடிகள் , மாங்கா காமிக்ஸ் , ரஜினியின் முத்து பட ரசிகர்கள் போன்றவை தான் நமக்கு நியாபகம் வரும் . ஆனால் அங்கு ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாட ஆசையோடு இருக்கிறார் என சொன்னால் நம்புவீர்களா ? ஜப்பானுக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி தான் உடனே உங்கள் மனதில் தோன்றும் . உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் . ஆம் , அவர் தான் 38 வயதாகும் ஷோகோ கிமுரா .  கிமுரா ஜப்பான் நாட்டின் பிரபலமான பேஸ்பால் வீரர் . அங்குள்ள பேஸ்பால் லீக்குகளில் 15 வருடத்திற்கும் மேலாக விளையாடி வரும் அணுபவ வீரர் .   2017- ம் ஆண்டு வயதை காரணம் காட்டி எந்த அணியும் கிமுராவை ஒப்பந்தம் செய்யவில்லை . ஆனால் தன்னால் இன்னும் சில காலம் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை கிமுராவிடம் இருந்தது . அந்த சமயத்தில் தான் , " நீங்கள் விரும்பினால் எங்களுடன் கிரிக்கெட் விளையாட வாருங்கள் " என ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அழைத்தது . அடிப்படையில் பேஸ்பாலும்