Skip to main content

மீண்டும் கனவாகிப் போன ரஞ்சி கோப்பை😢

இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ

‘ஒரே இரவில்’ கிரிக்கெட்டராக மாறிய பேஸ்பால் வீரர்



japan cricket player kimura shogo


பொதுவா ஜப்பான் நாடுன்னு சொன்னா சுமோ வீரர்கள், அறிவியலில் கில்லாடிகள், மாங்கா காமிக்ஸ், ரஜினியின் முத்து பட ரசிகர்கள் போன்றவை தான் நமக்கு நியாபகம் வரும். ஆனால் அங்கு ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாட ஆசையோடு இருக்கிறார் என சொன்னால் நம்புவீர்களா? ஜப்பானுக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி தான் உடனே உங்கள் மனதில் தோன்றும். உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார். ஆம், அவர் தான் 38 வயதாகும் ஷோகோ கிமுரா

கிமுரா ஜப்பான் நாட்டின் பிரபலமான பேஸ்பால் வீரர். அங்குள்ள பேஸ்பால் லீக்குகளில் 15 வருடத்திற்கும் மேலாக விளையாடி வரும் அணுபவ வீரர்.  2017-ம் ஆண்டு வயதை காரணம் காட்டி எந்த அணியும் கிமுராவை ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் தன்னால் இன்னும் சில காலம் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை கிமுராவிடம் இருந்தது. அந்த சமயத்தில் தான், "நீங்கள் விரும்பினால் எங்களுடன் கிரிக்கெட் விளையாட வாருங்கள்" என ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அழைத்தது. அடிப்படையில் பேஸ்பாலும் கிரிக்கெட்டும் ஒரேப் போன்றது தானே என்ற நினைப்பில் உடனடியாக களத்தில் இறங்கினார் கிமுரா

கிரிக்கெட் பற்றி குறைவாகவே தெரிந்திருந்தாலும், சச்சின் தெண்டுல்கரின் பேட்டிங் வீடியோக்களை பார்த்துவிட்டு தைரியமாக காலில் பேடை கட்டினார் கிமுரா. சூர்யவம்சம் படத்தில் ஒரே பாடலில் சரத்குமார் பணக்காரராக ஆவது போல், பல வருடங்களாக தொழில்முறை பேஸ்பால் வீரராக இருந்த கிமுரா ஒரே இரவில் கிரிக்கெட் வீரராக மாறினார்

கிரிக்கெட் பயிற்சியின் ஆரம்ப நாட்களில் பல சவால்களை சந்தித்தார். பேஸ்பால் போல் இங்கு பேட்டை மட்டும் சுத்தினால் போதும் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், பந்திற்கு ஏற்றார்ப் போல் பேட்டை மட்டுமல்ல காலையும் நகட்ட வேண்டும் என பின்பு தான் தெரிந்து கொண்டார். பல சமயங்களில் யார்க்கர் பாலை அடிக்க தெரியாமல் காலில் அடி வாங்கியுள்ளார்

ஆனால் அவர் மனஉறுதியை இழக்கவில்லை. 2018-ம் ஆண்டு தீவிரமாக பயிற்சி பெற தொடங்கிய கிமுரா, மே மாதத்திற்குள் ஜப்பானின் சிறந்த 20 வீரர்களூள் ஒருவராக இடம் பிடித்தார். மேலும் அந்த வருடத்திலேயே ஹாங்காங்கில் நடைபெற்ற கிழக்கு ஆசிய கோப்பை தொடரில் அறிமுக வீரராக ஜப்பான் அணிக்கு களம் இறங்கினார்

japan cricket player kimura shogo


இதற்கிடையில் அந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காணவும் டெல்லி வந்துள்ளார் கிமுரா. முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்த்ததும், அரங்கில் இருந்து பார்ப்பதை விட களத்தில் இறங்கி விளையாட வேண்டும் என்ற ஆசை அதிகமானதுடன் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணியில் இடம் பிடிக்க வேண்டும்  என்று கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் இவர் வயதிற்கும் அணுபவத்திற்கும் ஐபில் அணியில் நிச்சியம் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. ஒருவேளை கரீபியன் டி20 லீக், வங்கதேச பீரிமியர் லீக்கில் முயற்சித்து பார்க்கலாம். ஒருவேளை ஏதாவது ஒரு லீக்கில் கிமுரா விளையாட தகுதி பெற்றால் ஜப்பான் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய உத்வேகமாக அமையும். பேஸ்பால் வீரராக இருந்த கிமுரா கிரிக்கெட் விளையாட தொடங்கியிருப்பது உண்மையில் ஜப்பானில் ஊடக கவனத்தை அதிகரித்துள்ளதோடு கிரிக்கெட் குறித்த விழிப்புணர்வையும் அதிகப்படுத்தியுள்ளது

ஆஃப்கானிஸ்தானிற்கு எப்படி ரஷீத் கான் கிடைத்தாரோ அதுபோல் ஜப்பானுக்கு கிமுரா ஷோகோ இருப்பாரா?  


புகைப்பட உதவி: Japan Cricket Association

Comments

Popular posts from this blog

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் இதோ....

பேஸ்புக் பற்றி தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பேஸ்புக்கில் செலவிடும் கோடிக்கணக்கான நபர்கள் உலகமெங்கும் உள்ளனர். சிலருக்கு பேஸ்புக்கில் பதிவிடப்படும் வீடியோக்கள், செய்திகள், மீம்ஸ்களை பார்ப்பது பொழுதுபோக்காக உள்ளது. பொதுவாக நாம் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்துகிறோம்? எதற்காக பயன்படுத்துகிறோம்? சற்று யோசித்துப் பாருங்கள்… நம் செல்ஃபி புகைப்படத்தை நண்பர்களிடம் பகிரவோ அல்லது சுவாரஸ்யமாக செய்திகளை பொதுமக்களிடம் பகிரவோ அல்லது நமது சந்தோஷமான தருணங்களை வெளிக்காட்டிக் கொள்ளவோ பயன்படுத்தி வருகிறோம். ஆன்லைனில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நிச்சியம் முடியும்! இதில் பல வழிகள் உள்ளது. எந்த முதலீடும் இன்றி (உங்கள் நேரமும் உழைப்பும் அவசியம் தேவை) பேஸ்புக்கில் சம்பாதிக்க சிறந்த வழிகளை உங்களுக்காக இங்கு கூறுகிறேன். இதன் மூலம் பகுதி நேரமாக கூட நீங்கள் சம்பாதிக்கலாம். பேஸ்புக் பக்கம் (Facebook Page) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

வீட்டிலிருந்தே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எளிய வழிகள்

நம் ஒவ்வொருவருக்குமே வாழ்கையில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் பல வேலைகளையும் தொழில்களையும் முயற்சித்து பார்த்திருப்போம். சிலருக்கு இது கைகூடி பணம் லட்சம் லட்சமாக கொட்டும். பலரோ, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்து எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பார்கள். எந்த முதலீடும் செய்யாமல் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? தொழில்நுட்ப வசதிகள் மிகுந்துள்ள இன்றைய காலத்தில், வீட்டிலிருந்தே லட்சக்கணக்காக சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆம், உண்மையை தான் சொல்கிறேன். இதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என நீங்கள் பயப்பட வேண்டாம். ஒரு கணினி அல்லது லேப்டாப் மற்றும் இணைய தொடர்பு – இது இருந்தாலே போதும். சரி, என்னிடம் லேப்டாப்பும் இண்டர்நெட் தொடர்பும் இருக்கிறது. இதை வைத்து என்ன செய்ய என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்களுக்காக தான் இந்த கட்டுரை. வலைப்பதிவு (Blog) அல்லது வலைதளம் (Website): உங்களுக்கென்று சொந்தமாக ப்ளாக் அல்லது வெப்சைட் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர்

சயன கோலத்தில் அத்திவரதர் அத்தி வரதரை எப்போ தரிசிக்க போறீங்க? இன்னும் ஏன் பாக்காமா இருக்கீங்க? இனி 40 வருஷத்துக்கு பிறகு தான் பார்க்க முடியும், உடனே கிளம்புங்க… நீங்க தமிழ்நாட்டுல வசிப்பவரா இருந்தா, கடந்த ஒரு மாசத்துல மேலே சொன்ன கேள்விய உங்ககிட்ட கண்டிப்பா ஒரு தடவையாவது யாராவது ஒருத்தர் கேட்டிருப்பாங்க. பத்திரிக்கை செய்தியிலும், தொலைக்காட்சி நேரலையிலும், சமூக ஊடகத்திலும் கூட கடந்த ஒரு மாதமாக அத்தி வரதரே எங்கும் நிரம்பியிருகிறார். அதுமட்டுமல்லாமல் அத்தி வரதரை தரிசிக்க நாடெங்கிலும் இருந்து மக்கள் குவிகிறார்கள். அப்படியென்ன விசஷேம் இந்த கோலில் இருக்கிறது? "கோயில் நகரம்" என அழைக்கபடும் காஞ்சிபுரத்தில் உள்ளது வரதராஜப் பெருமாள் கோயில். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள ஆனந்த சரஸ் குளத்திலிருந்து 40 வருடத்திற்கு ஒரு முறை அத்தி மரத்தாலான பெருமாளின் திருவுருவம் வெளியே எடுக்கப்படுகிறது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி தருகிறார் அத்திவரதர். 48 நாட்கள் பொதுமக்களுக்கு தரிசனம்